இந்தியா

ஜே.இ.இ. - நீட் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

நடப்பு கல்வி ஆண்டுக்கான JEE மற்றும் நீட் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

JEE தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையும், NEET தேர்வு செப்டம்பர்13 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நடப்பு கல்வி ஆண்டுக்கான JEE மற்றும் நீட் தேர்வுகளை நடத்தும் போது போதுமான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். கொரோனாவால் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிட முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்