ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்தும், கைது நடவடிக்கை குறித்தும் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர், வன்முறை தொடர்பான 3 வழக்குகளை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருவதாகவும், சாட்சியங்களையும், வன்முறையில் ஈடுபட்டோரையும் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எனினும் வன்முறையில் ஈடுபட்டதாக யாரையும் கைது செய்யவில்லை என குறிப்பிட்டார்.