இந்தியா

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்.. அதிகரித்த பலி எண்ணிக்கை

தந்தி டிவி

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஓட்டுநர் நிலைதடுமாறிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த குழந்தை உள்பட 10 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் புனித யாத்திரை சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்