இந்தியா

"ஜம்மு - காஷ்மீர் சூழல் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது" - முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கருத்துப்பதிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் சூழல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுவதாகவும், ஆனால் ஒரு வார்த்தை கூட பதிலாக கிடைக்கவில்லை என, முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் சூழல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுவதாகவும், ஆனால் ஒரு வார்த்தை கூட பதிலாக கிடைக்கவில்லை என, முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், தாம் இதுவரை 6 முறை காஷ்மீர் மாநில முதலமைச்சராக இருந்ததாகவும், ஆனால் என்ன நிலவுகிறது என்பதை, கணிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில், பல முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும்,காஷ்மீரை சேர்ந்த ஒவ்வொருவரின் நிலையும் இது தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்