காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா மற்றும் மகள் சஃபியா ஆகியோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீநகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதையடுத்து, அவர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தி வாகனத்தில் அழைத்து சென்றனர்.