ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நிலவும் பனிப்பொழிவை, அங்கு குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர். பனியால் மூடப்பட்ட சாலைகள், மரங்கள் மற்றும் வீடுகளைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள், பனிமழையில் நனைந்தபடி சென்றனர். வெண்போர்வை போர்த்திய மலையின் அழகு பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.