இந்தியா

MLA ஓய்வூதியம் கேட்ட ஜெகதீப் தங்கர்- எதிர்கட்சிகளின் மெகா கேள்விக்கு கிடைத்த விடை

தந்தி டிவி

எம்.எல்.ஏ. ஓய்வூதியம் கேட்ட ஜெகதீப் தங்கர் - எதிர்கட்சிகளின் மெகா கேள்விக்கு கிடைத்த விடை குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் உடல்நலனை காரணம் காட்டி கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் எங்கு இருக்கிறார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் ஓய்வூதியத்திற்காக ஜெகதீப் தங்கர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1993ஆம் ஆண்டு கிஷன்கர் தொகுதி எம்.எல்.ஏவாக ஜெகதீப் தேர்வு செய்யப்பட்ட நிலையில்,.  ஒப்புதல் கிடைத்தால், அவருக்கு மாத ஓய்வூதியமாக 43,000 ரூபாய் கிடைக்கும். இது தவிர குடியரசு துணைத் தலைவர் பதவிக்காகவும், ஜெகதீப்பிற்கு ஓய்வூதிய சலுகைகள் வழங்கப்படும்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்