இந்தியா

"2 நாட்களில்.. 189 கோடி.." - ஜே.பி.நட்டா சொன்ன விஷயம்

தந்தி டிவி

இமாச்சல பிரதேச மக்களுக்காக ஒன்றிணைந்து செயல்படுவது எங்கள் பொறுப்பு என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இவர், இமாச்சல பிரதேச வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் சுக்வீந்தர் சிங்குடன் பிரதமர் தொடர்ந்து பேசி வருகிறார் என்று கூறினார். மத்திய அரசு இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு அனைத்து உதவியையும் செய்து வருகிறது என்றும் அவர் கூறினார். சுக்வீந்தர் சிங், பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து கோரிக்கை விடுத்ததை அடுத்து, 2 நாட்களில் 189 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இமாச்சல பிரதேச மக்களுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதே தங்கள் பொறுப்பு என்றும், மத்திய அரசும், பிரதமர் மோடியும் அனைத்து உதவிகளையும் செய்வார்கள் என்றும் ஜே.பி.நட்டா கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்