இந்தியா

"பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா?" - கருத்துகணிப்பை ஏற்க சசி தரூர் மறுப்பு

உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு இந்தியா என்ற கருத்துக்கணிப்பை ஏற்க இயலாது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அமெரிக்காவில் நடைபெற்ற இந்தோ-அமெரிக்க கருத்தரங்கில் பேசிய அவர், ஆப்கானிஸ்தான், சிரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நம்ப முடியாது என்றார்.

அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிராக ஆங்காங்கே ஒன்றிரண்டு அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருவதாக குறிப்பிட்ட அவர், இது இந்திய ஆண்களுக்கு அவமானகரமான ஒன்று என்றார்.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்று கூறுவதை ஒருபோதும் ஏற்க இயலாது என்றும் சசி தரூர் குறிபிட்டார்.

காவல்துறையில் அதிக பெண்கள் என்ற பல புதிய மாற்றங்களால் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக மாறி வருவதையும் சசிதரூர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை