மும்பையைச் சேர்ந்த அனம்தா என்ற சிறுமி விபத்து ஒன்றில் தன் கையை இழந்துவிட்டார். ஆனால், ரியா என்ற உயிரிழந்த சிறுமியின் கை அனம்தாவுக்கு பொருத்தப்பட்டு, அது இயங்கவும் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே இளம் வயதில் கை மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றார் அனம்தா.
தனக்குக் கை கொடுத்த ரியாவின் குடும்பத்தையே தன் சொந்தக் குடும்பமாக ஏற்றுக்கொண்ட அனம்தா, இந்த ரக்ஷா பந்தன் தினத்தில் அவர் வீட்டுக்கு நேரில் சென்று, ரியாவின் கையாலேயே அவர் அண்ணனின் மணிக்கட்டில் பாசத்தோடு ராக்கி கட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது