நிர்பயா வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை தூக்கிலிடக்கோரி, சர்வதேச துப்பாக்கி சுடும் வீரங்கனை வர்திகா சிங், ரத்தத்தால் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், டெல்லி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கருணை காட்டக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். நிர்பயா வழக்கில் கொடுக்கப்படும் தண்டனை மூலம், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறையும் என,அந்த கடித்ததில் வலியுறுத்தியுள்ளார்.