இந்திய ராணுவ வீரர்களுக்கு நல்ல வசதிகளை உருவாக்கித் தருவதற்காக இந்திய ஐடி நிறுவனங்கள் சார்பில் அதிக வரி செலுத்துவோம் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார். இந்திய ஐடி நிறுவனங்கள் கடினமாக உழைப்பும், வளர்ச்சியை எட்டுவதன் மூலம் அரசுக்கு அதிக வரியை செலுத்தும் என்றும், அதனால் ராணுவ வீரர்களுக்கு நல்ல வசதிகளும், ஊதியமும் கிடைக்கும். அவர்களின் குடும்பங்களுக்கும் பயன் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்