இந்தியா

தலைக்கேறிய போதையில் தகராறு... பயணியை பெல்டால் சரமாரியாக தாக்கிய TTR - அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

ரயிலில் மது அருந்திவிட்டு ஒழுங்கீனமாக நடந்துகொண்ட பயணியை, டிக்கெட் பரிசோதகர் பெல்டால் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரித்சரில் இருந்து சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ஒருவர், குடித்துவிட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர், அந்த நபரை தனது பெல்டால் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், லக்னோ கோட்ட ரயில்வே பொது மேலாளர், டிக்கெட் பரிசோதகரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். படுகாயம் அடைந்த அந்த நபர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"