இந்தியா

விரைவு ரயிலில் கடவுள் சிவன் பட விவகாரம் : ரயில்வே துறை விளக்கம்

காஷி மஹாகால் விரைவு ரயிலில் கடவுள் சிவனுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லை என ரயில்வேத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தந்தி டிவி

காஷி மஹாகால் விரைவு ரயிலில் கடவுள் சிவனுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லை என ரயில்வேத்துறை விளக்கம் அளித்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் உள்ள புனித இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ள இந்த விரைவு ரயில் சேவையை வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த ரயிலில் உள்ள ஒரு பெட்டியில் படுக்கை வசதி கடவுள் சிவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. வெள்ளோட்டத்தையொட்டி ரயில்வே ஊழியர்கள் சிலர் , கடவுள் சிவனின் புகைப்படங்களை பயணிகள் செல்லும் பெட்டியில் வைத்து பூஜை செய்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை