1.3 கி.மீ டபுள் டக்கர் சரக்கு ரயில்... இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் இந்திய ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து வரலாற்றில் புதிய மைல்கல்லாக, மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து குஜராத்தில் உள்ள வதோதரா வரை அதிநவீன இரட்டை அடுக்கு சரக்கு ரயில் இயக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் வழக்கமான ரயில்களை விட இரு மடங்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்த ரயில், 1.3 கிலோமீட்டர் நீளத்திற்கு பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்தின் வேகத்தை கணிசமாக உயர்த்தவும், சரக்கு கையாளும் செலவைக் குறைக்கவும், இந்திய வர்த்தகத் துறைக்கு இரட்டை அடுக்கு சரக்கு ரயில் மிகப்பெரிய தூணாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.