இந்தியா

இந்திய கடற்படை தினம் : போர் நினைவு சின்னத்தில் மரியாதை

இந்திய கடற்படை தினத்தையொட்டி, சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச் சின்னத்தில் கடற்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தந்தி டிவி
இந்திய கடற்படை தினத்தையொட்டி, சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச் சின்னத்தில் கடற்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 1971ஆம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் ஆபரேஷன் திரிசூலம் மூலம் பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு