இந்தியா

"கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்" - மத்திய சுகாதாரத்துறை அறிவுரை

ஊரடங்கு தளர்வு மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவது சவாலானது என்றும் கொரோனாவுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
கடந்த ஒன்றாம் தேதி முதல் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவது சவாலானது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு வழிகாட்டு முறைகள் மிக மிக அவசியம், சமூக பழக்க வழக்க மாற்றத்தை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இதற்கு மக்கள் ஆதரவு தேவைப்படுவதாகவும் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்