இந்தியா

"கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்" - மத்திய சுகாதாரத்துறை அறிவுரை

ஊரடங்கு தளர்வு மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவது சவாலானது என்றும் கொரோனாவுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
கடந்த ஒன்றாம் தேதி முதல் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவது சவாலானது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு வழிகாட்டு முறைகள் மிக மிக அவசியம், சமூக பழக்க வழக்க மாற்றத்தை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இதற்கு மக்கள் ஆதரவு தேவைப்படுவதாகவும் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்