அயர்லாந்தில் இந்தியர் மீது கொலைவெறி தாக்குதல்
அயர்லாந்தில் இந்தியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்ஸி ஓட்டுநரான லக்வீர் சிங், அயர்லாந்து தலைநகர் டூப்லினில் 23 ஆண்டுகளாக வசித்து வருகிறார். வழக்கம் போல் கடந்த வெள்ளியன்று டப்லின் புறநகர் பகுதியான பாலிமனில், அவரது டாக்ஸியில் ஏறிய இளைஞர்கள், லக்வீர் சிங்கை கீழே தள்ளி, உங்கள் நாட்டிற்கு போ எனக்கூறி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்நாட்டுக்கான இந்திய தூதரகம் விசாரணை செய்து வருகிறது.