இந்தியா

ஸ்கேன் மையங்களின் உரிமத்தை புதுப்பிக்கும் விவகாரம் - மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியாவில் உள்ள மருத்துவ ஸ்கேன் மையங்களின் உரிமத்தை கொரோனா காலத்தில் புதுப்பிக்க தேவையில்லை என்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தந்தி டிவி

இந்தியாவில் உள்ள மருத்துவ ஸ்கேன் மையங்களின் உரிமத்தை கொரோனா காலத்தில் புதுப்பிக்க தேவையில்லை என்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு, தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. கேரளாவை சேர்ந்த சாபு மேத்யூ என்பவர் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது என்றும், இது ஜூன் 30 ஆம் தேதிக்கும் மேல் நீட்டிக்கப்பட்டால், விவகாரத்தை நீதிமன்றத்தின் முன்பு மீண்டும் எழுப்ப மனுதாரருக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தனர். மேலும், மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..