இந்தியா

ஸ்கேன் மையங்களின் உரிமத்தை புதுப்பிக்கும் விவகாரம் - மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியாவில் உள்ள மருத்துவ ஸ்கேன் மையங்களின் உரிமத்தை கொரோனா காலத்தில் புதுப்பிக்க தேவையில்லை என்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தந்தி டிவி

இந்தியாவில் உள்ள மருத்துவ ஸ்கேன் மையங்களின் உரிமத்தை கொரோனா காலத்தில் புதுப்பிக்க தேவையில்லை என்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு, தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. கேரளாவை சேர்ந்த சாபு மேத்யூ என்பவர் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது என்றும், இது ஜூன் 30 ஆம் தேதிக்கும் மேல் நீட்டிக்கப்பட்டால், விவகாரத்தை நீதிமன்றத்தின் முன்பு மீண்டும் எழுப்ப மனுதாரருக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தனர். மேலும், மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்