இந்தியா

166 பேரை பலி கொண்ட மும்பை தாக்குதல் சம்பவம் : இன்று 10-வது ஆண்டு நினைவு தினம்..

166 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட மும்பை தாக்குதலின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தந்தி டிவி

கடந்த 2008 -ஆம் ஆண்டு, இதே நாளில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக மும்பை நகருக்குள், ஊடுருவினர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்டு கபே உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால், மும்பை நகரமே போர்க்களமாக மாறியது.

உலக நாடுகளையே உலுக்கிய இந்த அதிபயங்கர தாக்குதலில், அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதிக்கு மரண விதிக்கப்பட்டு, கடந்த 2012-ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டான். தாக்குதலில் பலியானவர்களுக்கு, மும்பையில், இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதையொட்டி, மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்