இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க இந்தியா முழு உதவியையும் வழங்கும் என இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். கண்டியில் செய்தியாளரிடம் பேசிய அவர், இலங்கைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை முற்றிலும் ஒடுக்க இந்தியா உதவும் என்று கூறினார் . தீவிரவாதத்துக்கு எதிராக இலங்கையுடன் இணைந்து இந்தியா போராடும் என்றும் அவர் தெரிவித்தார்.