இந்தியா

"அமெரிக்கா போல இந்தியாவாலும் தாக்குதல் நடத்த முடியும்" - நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து

பாகிஸ்தானில் உள்ள அபோட்டபாத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனை அமெரிக்கா கைது செய்ததை போல, இந்தியாவாலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பாகிஸ்தானில் உள்ள அபோட்டபாத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனை அமெரிக்கா கைது செய்ததை போல, இந்தியாவாலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவல், பாகிஸ்தான் மீது தாக்குதல் என்பது கற்பனையான, பதற்றமான, ஒன்று என்ற இருந்த நிலை மாறி, தற்போது அது சாத்தியம் என்ற நிலை வந்துள்ளதாக ஜேட்லி கூறினார். பதில் தாக்குதல் நடத்த ஒரு வாரக்கால அவகாசம் என்பது எந்த நாட்டிற்கும் அதிகபட்சம் என்று குறிப்பிட்டுள்ள அருண் ஜேட்லி, கடந்த 24 மணிநேரத்தை கவனித்தால், ஒரு வாரத்தில் நடைபெற வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும், ஒரே நாளில் நடைபெற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு