2 ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நேற்றைய விசாரணையின் போது சி.பி.ஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இது பொது நலன் சார்ந்த வழக்கு எனவே உடனடி விசாரணை தேவை என வாதிட்டார். எதிர்தரப்பு வழக்கறிஞர் கொரோனா காலத்தில் , உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி இந்த வழக்கினை விசாரிக்க வேண்டும் என்றார். இதனையடுத்து நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி, வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.