இந்தியா

பெண்களுக்கு சுதந்திரம், முழு பாதுகாப்பு - பிரதமர் மோடி உறுதி

நாடு முழுவதும் பெண்களுக்கு சுதந்திரமும், முழு பாதுகாப்பும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடு முழுவதும் பெண்களுக்கு சுதந்திரமும், முழு பாதுகாப்பும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற பாஜக தேசிய மகளிர் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், வருங்காலங்களில், பெண்களுக்கு கூடுதலாக பாதுகாப்பு கிடைக்கும் என உறுதி அளித்தார். முத்தலாக் சட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இதற்கு எழுந்த எதிர்ப்புகளை சுட்டிக்காட்டினார். இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியாக இருந்து, எதிர்ப்புகளையும், இடையூறுகளையும் சமாளித்து வெற்றி பெற்றதாக பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்தார். பாஜகவின் தேசிய மகளிர் மாநாட்டில், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’