இந்தியா

அனைத்து வகையிலும் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படும் - நாராயணசாமி

அனைத்து வகையிலும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த புதுச்சேரி அரசு தீவிர கவனம் செலுத்துவதாக சுதந்திர தின உரையில் அம்மாநில முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரி மாநிலம் இந்திராகாந்தி மைதானத்தில், நடந்த விழாவில், காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் நாராயணசாமி ஏற்றுக் கொண்டார். பின்னர், மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றி புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைபை வசதி செய்யப்பட்டுள்ளதாக பெருமிதமாக தெரிவித்தார். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த சிறப்பு வகுப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்றார். இதையடுத்து, அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை