நாடு இருக்கும் இந்த இக்கட்டான சூழலில் துணிந்து முடிவெடுத்து அரசு அறிவிப்பு - நாட்டு மக்களுக்கு பெரும் நிம்மதி #nirmalasitharaman #gascylindershortage ரூ.1 லட்சம் கோடி பொருளாதார நிலைத்தன்மை நிதி அறிவிப்பு மேற்கு ஆசியப் போர் மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலி பாதிப்புகளை சமாளிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ‘பொருளாதார நிலைத்தன்மை நிதி’ உருவாக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டின் துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அவர், கச்சா எண்ணெய், எல்.பி.ஜி மற்றும் உரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை மக்கள் மீது சுமத்தாமல் சமாளிக்க இந்த நிதி உதவும் என்று தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஐம்பதாயிரம் கோடி ரூபாயாக இருந்ததாகவும், தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நெருக்கடி இருந்தாலும் 2026–27 நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 4.3 சதவீதமாகவே இருக்கும் என்றும் அதற்குள்ளேயே இந்தச் செலவுகள் ஈடுகட்டப்படும் என நிர்மலா சீதாராமன் உறுதிபடத் தெரிவித்தார்