கண் அசந்த நேரத்தில் கைவரிசை - கிலோ கணக்கில் ஆட்டையை போட்டு ஓட்டம் பிடித்த திருடன் மத்திய பிரதேசத்தில் நகைக்கடை உரிமையாளர் தூங்கிய நேரத்த்தில் 5 கிலோ வெள்ளி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..குனா பகுதியில் உள்ள சந்தையில் சிறிய நகைக்கடையில், டிவி பார்த்துக் கொண்டே உரிமையாளர் கண் அயர்ந்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய திருடன், அங்கிருந்த வெள்ளி நகைகள் இருந்த பையைத் திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளார்.. இந்தத் திருட்டுக் காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், கோட்வாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்....