Gas Cylinder Shortage | தமிழகம் வரை தெரிந்த ஈரான் போர் தாக்கம் - பீதியில் பங்க்-களுக்கு படையெடுத்த மக்கள் #sivagangai #petrol #gascylindershortage #gascylinder #thanthitv சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால், சிவகங்கை பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் பெட்ரோல் பங்குகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சிலர் தங்களது வாகனங்களில் மட்டுமின்றி பாட்டில்கள் மற்றும் பெரிய கேன்களிலும் பெட்ரோல், டீசலை வாங்கிச் செல்கின்றனர் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் முன்கூட்டியே எரிபொருளை சேமித்து வைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.