ஹைதராபாத்தில் உள்ள புச்சபள்ளியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்களான பூரணசந்தர், தினேஷ், அன்வேஷ், மணிகண்டா ஆகிய 4 பேரும் அரக்கு வனப்பகுதியில் இருந்து இரண்டை கிலோ கஞ்சாவை வாங்கி வந்துள்ளனர். கிருஷ்ணகிரி வழியாக தாடேபள்ளி அருகே வந்த போலீசார் அவர்களின் காரை சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பிச் செல்ல முயன்ற அவர்களை போலீசார் விரட்டிபிடித்ததோடு அவர்களை கைது செய்தனர். விசாரணையில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா கடத்தி அதனை மாணவர்களிடம் விற்றது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.