இந்தியா

கஞ்சா கடத்திய பொறியியல் கல்லூரி மாணவர்கள் - மாணவர்கள் 4 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை

ஹைதராபாத்தில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட கஞ்சா கடத்திய பொறியியல் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

ஹைதராபாத்தில் உள்ள புச்சபள்ளியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்களான பூரணசந்தர், தினேஷ், அன்வேஷ், மணிகண்டா ஆகிய 4 பேரும் அரக்கு வனப்பகுதியில் இருந்து இரண்டை கிலோ கஞ்சாவை வாங்கி வந்துள்ளனர். கிருஷ்ணகிரி வழியாக தாடேபள்ளி அருகே வந்த போலீசார் அவர்களின் காரை சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பிச் செல்ல முயன்ற அவர்களை போலீசார் விரட்டிபிடித்ததோடு அவர்களை கைது செய்தனர். விசாரணையில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா கடத்தி அதனை மாணவர்களிடம் விற்றது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ