இந்தியா

டெல்லி கலவரத்தில் மனித உரிமை மீறல் புகார் - "உண்மை அறியும் குழுக்களை அமைக்க புலனாய்வு இயக்குநருக்கு ஆணை"

டெல்லி கலவரத்தின்போது நடந்த மனித உரிமை மீறல் தொடர்பான இரண்டு உண்மை அறியும் குழுக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப, புலனாய்வு இயக்குநருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. வன்முறை மற்றும் மோதலை கருத்தில் கொண்டு, ஓரளவு அமைதி நிலை திரும்பிய பின்னர் விசாரணையை தொடங்க அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளது. உண்மை அறியும் குழுவினர் வடகிழக்கு டெல்லி காவல் கட்டுப்பாட்டு அறை, பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வன்முறை, கலவரத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து பேச உள்ளதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இரண்டு உண்மை அறியும் குழுக்களை அனுப்ப புலனாய்வுத்துறை இயக்குநருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை