Sabarimalai | Fire | சபரிமலை ஐயப்பனை தரிசிக்க போன இடத்தில் தமிழக பக்தர்களுக்கு நேர்ந்த பயங்கரம் #sabarimalai #kerala #fireaccident கேரள மாநிலம் இடுக்கியில் சபரிமலைக்கு சென்ற தமிழக ஐயப்ப பக்தர்களின் கார் திடீர் என தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஐய்யப்ப பக்தர்கள் சென்ற காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்த நிலையில், தீ மளமளவென பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேரும் காரில் இருந்து உடனடியாக வெளியேறினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேரள தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்தனர்.