Home Guard | Viral Video | சாலையில் படுத்து பேருந்தை நிறுத்திய ஊர்க்காவல் படை வீரர் | காரணத்தை கேட்டு பாராட்டி தள்ளிய மக்கள்
தன் மீது பேருந்தை ஏற்றி செல்ல கூறிய ஊர்க்காவல் படை வீரர்
பள்ளி மாணவர்களை ஏற்றாமல் செல்ல முயன்ற பேருந்து முன்பு, போராட்டம் நடத்திய கேரள ஊர்க்காவல் படை வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலம் கோழிக்கோடு குண்டமங்கலம் மார்கஸ் சாலையில், சுற்றுவட்டார பகுதிகளில் பேருந்துக்காக காத்திருக்கும் பள்ளி மாணவர்களை, தனியார் பேருந்துகள் நிறுத்தி ஏற்றி செல்லாமல் இருந்துள்ளது. இதனை கண்டித்து ஊர்காவல் படை வீரர் நாகராஜ், பேருந்து முன்பாக சாலையில் படுத்து பேருந்தை நிறுத்தி மாணவர்களை ஏற்றி செல்லவேண்டும் என போராட்டம் நடத்தினார். இச்செயல் அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.