இந்தியா

காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுடும் இந்து மகா சபை தலைவர்...

காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
காந்தி நினைவு நாளான நேற்று, காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்திரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில் நேற்று காந்தியின் உருவபொம்மையை வைத்து, அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பூஜா சகுன் பாண்டே துப்பாக்கியால் சுட்டார். அத்துடன் கோட்சே உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, அடையாளம் தெரிந்த 8 பேர், அடையாளம் தெரியாத 4 பேர் என மொத்தம் 12 பேர் மீது அலிகார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக காவல் உதவி ஆணையர் நீரஜ் தெரிவித்துள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு