இந்தியா

காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுடும் இந்து மகா சபை தலைவர்...

காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
காந்தி நினைவு நாளான நேற்று, காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்திரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில் நேற்று காந்தியின் உருவபொம்மையை வைத்து, அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பூஜா சகுன் பாண்டே துப்பாக்கியால் சுட்டார். அத்துடன் கோட்சே உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, அடையாளம் தெரிந்த 8 பேர், அடையாளம் தெரியாத 4 பேர் என மொத்தம் 12 பேர் மீது அலிகார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக காவல் உதவி ஆணையர் நீரஜ் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு