இந்தியா

காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுடும் இந்து மகா சபை தலைவர்...

காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
காந்தி நினைவு நாளான நேற்று, காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்திரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில் நேற்று காந்தியின் உருவபொம்மையை வைத்து, அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பூஜா சகுன் பாண்டே துப்பாக்கியால் சுட்டார். அத்துடன் கோட்சே உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, அடையாளம் தெரிந்த 8 பேர், அடையாளம் தெரியாத 4 பேர் என மொத்தம் 12 பேர் மீது அலிகார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக காவல் உதவி ஆணையர் நீரஜ் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்