இந்தியா

காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுடும் இந்து மகா சபை தலைவர்...

காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
காந்தி நினைவு நாளான நேற்று, காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்திரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில் நேற்று காந்தியின் உருவபொம்மையை வைத்து, அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பூஜா சகுன் பாண்டே துப்பாக்கியால் சுட்டார். அத்துடன் கோட்சே உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, அடையாளம் தெரிந்த 8 பேர், அடையாளம் தெரியாத 4 பேர் என மொத்தம் 12 பேர் மீது அலிகார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக காவல் உதவி ஆணையர் நீரஜ் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை