இமாச்சலப்பிரதேசத்தில் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் இமாச்சலப்பிரதேசத்தில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மணாலியில் உள்ள மலைகள் பனிசூழ்ந்து காட்சியளிக்கின்றன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.