திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வாகனம் - 4 பேர் பலி, 18 பேர் நிலை?
இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு அருகே உள்ள சோஜா பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வாகனத்தில் இருந்த 18 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பஞ்சார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."