Himachal Pradesh | கடும் நிதி நெருக்கடியால் இந்த மாநிலத்தில் முதல்வர், அமைச்சர்களின் சம்பளம் குறைப்பு #HimachalPradesh #thanthitv இமாச்சலப் பிரதேசத்தில் நிலவும் கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் சம்பளம் மற்றும் படிகளை அடுத்த ஓராண்டிற்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், மாநிலத்தின் மொத்தச் செலவினம் 3,586 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்குவதற்காக இந்த சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கமளித்துள்ளார்.