இந்தியா

இமாச்சலில் தொடரும் கனமழை : 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பொழிவால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கின்னாவூர், குலூ மற்றும் கங்காரா மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பை தொடர்ந்து அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. குடிநீர் மற்றும் மின்சார வசதி இல்லாமல் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்தும் முடங்கியது. நீர்பிடிப்பு பகுதிகளில் ​பெய்து வரும் கனமழையால் அணைகளில் இருந்து அதிக அளவில் நீர்திறக்கப்பட்டுள்ளது.

இதனால் ரவி, பியாஸ் உள்ளிட்ட நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அதிகரித்தவண்ணம் இருப்பதால் மக்கள் அருகில் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை