கனமழையால் தம்சா ஆற்றில் வெள்ளம்
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கனமழை எதிரொலியாக, தம்சா (Tamsa) ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புகழ்பெற்ற தப்கேஷ்வரர் கோவிலைச் சுற்றி, செந்நிறத்தில் மழை வெள்ளம் பேரிரைச்சலோடு பாய்ந்தோடுகிறது.
ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள டேராடூன் மாவட்ட நிர்வாகம், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.