இந்தியா

கேரளாவில் தொடரும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்..

கேரளாவில் தொடரும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்.. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்

தந்தி டிவி

கேரளாவில் தொடரும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்.. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கொல்லம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றது.கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொல்லம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் கிளாப்பனா கிராமத்தில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனைத் தொடர்ந்து தென்மலை அணை திறக்கப்பட்டதால் கல்லடை ஆற்றின் கரையோரத்தில் உள்ள வீடுகளும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. மேலும், கனமழையால் பதனபுரம் பகுதியில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்த நிலையில் அஞ்சல் ஆயூர் பகுதியில் தரைப்பாலமும் சேதமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்