இந்தியா

கேரளாவில் தொடரும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்..

கேரளாவில் தொடரும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்.. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்

தந்தி டிவி

கேரளாவில் தொடரும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்.. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கொல்லம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றது.கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொல்லம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் கிளாப்பனா கிராமத்தில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனைத் தொடர்ந்து தென்மலை அணை திறக்கப்பட்டதால் கல்லடை ஆற்றின் கரையோரத்தில் உள்ள வீடுகளும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. மேலும், கனமழையால் பதனபுரம் பகுதியில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்த நிலையில் அஞ்சல் ஆயூர் பகுதியில் தரைப்பாலமும் சேதமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை