இந்தியா

கேரளாவில் தொடரும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்..

கேரளாவில் தொடரும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்.. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்

தந்தி டிவி

கேரளாவில் தொடரும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்.. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கொல்லம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றது.கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொல்லம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் கிளாப்பனா கிராமத்தில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனைத் தொடர்ந்து தென்மலை அணை திறக்கப்பட்டதால் கல்லடை ஆற்றின் கரையோரத்தில் உள்ள வீடுகளும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. மேலும், கனமழையால் பதனபுரம் பகுதியில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்த நிலையில் அஞ்சல் ஆயூர் பகுதியில் தரைப்பாலமும் சேதமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்