Jammukashmir | மொத்தமாக புரட்டி போட்ட கனமழை - சீறி ஓடிய வெள்ளத்தில் மிதந்த சடலங்கள் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ராஜௌரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ராஜௌரி மாவட்டத்தின் நவ்ஷேரா பகுதியில் உள்ள முனாவர் ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, இந்திய ராணுவம், மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஆகியவை இணைந்து நடத்திய தீவிர கூட்டு மீட்பு நடவடிக்கையின் மூலம் அந்த உடல் மீட்கப்பட்டது.