ஹரியானா மாநிலம் குருகிராமில் காவல்துறையினர் மிதிவண்டியில் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். 'பீட் சைக்கிள்' என்ற திட்டம் குருகிராம் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மிதிவண்டிகளில் வீதிகளிலும், சாலைகளிலும் ரோந்து செல்கின்றனர். எளிதாக சென்றுவருவதற்கு ஏற்ற வாகனம் மிதிவண்டி என்பதால் இந்த திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.