ஹரியானா மாநிலம் குருகிராமில், உள்ள ஒரு பேக்கேஜிங் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இந்நிலையில் தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவியது.