இந்தியா

ஹரியானாவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

ஹரியானாவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

ஹரியானா மாநில​ம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹரிசிங்புராவில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி, ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. 50 அடி ஆழத்தில் உள்ள அந்த சிறுமியை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினருடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து, தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த அந்த சிறுமியை மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது. இறுதியில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி