இந்தியா

ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன வளர்ப்பு பூனை : 20 நாட்களுக்கும் மேலாக தேடி வரும் குஜராத் தம்பதி

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த தம்பதிகள் காணாமல் போன தங்களது வளர்ப்பு பூனையை ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த தம்பதிகள் காணாமல் போன தங்களது வளர்ப்பு பூனையை ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேடி வருகின்றனர். சூரத்தில் துணி வியாபாரம் செய்து வரும் ஒரு தம்பதியினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தங்களது செல்லப்பிராணியான பூனையுடன் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சாமிதரிசனம் செய்ய வந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது ரேணிகுண்டா ரயில் நிலையத்தில், பூனை காணாமல் போனது. இந்நிலையில் தங்களது குழந்தை போல வளர்த்து வந்த பூனையை சுமார் 20 நாட்களுக்கும் மேலாக ரயில் நிலையத்திலேயே அவர்கள் தேடி வருவது பயணிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை