இந்தியா

540 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து 30 மணி நேரத்திற்கு பிறகு பிணமாக வெளியே வந்த 18 வயது இளம்பெண்

தந்தி டிவி

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள கந்தேரை கிராமத்தில் 540 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 18 வயது இளம்பெண் திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு விழுந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படைக் குழுவினரும் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். 490 அடி ஆழத்தில் சிக்கியிருந்த அந்த பெண்ணுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது. சுமார் 30 மணி நேர போராட்டத்திற்குப் பின் அந்த பெண்ணை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுயநினைவின்றி இருந்த அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு