இந்தியா

ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைப்பு - தொழில்நுட்ப கோளாறு காரணம் என இஸ்ரோ தகவல்

நாளை விண்ணில் செலுத்தப்பட இருந்த ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

தந்தி டிவி

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த வரிசையில், ஜிசாட்-1 என்ற செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்தது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி-எப்10 என்ற ராக்கெட் மூலம் நாளை மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்ணில் செலுத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்