திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி தங்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்க, மலையப்பசாமி ஸ்ரீதேவி பூதேவி சகோதரராக எழுந்தருளி, தங்கத் தேரில் பவனி வந்தார். நான்கு மாட வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் கற்பூர ஆரத்தி ஏற்றி வழிபட்டனர்.