இந்தியா

"10 பெண்களும் அவர்களாகவே திரும்பிச்சென்றுவிட்டனர்" - பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி.நூஹ் விளக்கம்

விஜயவாடாவை சேர்ந்த 10 பெண்கள் சபரிமலை செல்வதற்காக நேற்று பம்பை வரை வந்தனர்.

தந்தி டிவி
விஜயவாடாவை சேர்ந்த 10 பெண்கள் சபரிமலை செல்வதற்காக நேற்று பம்பை வரை வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அவர்களின் வயது 50-க்கும் கீழ் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 10 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து விளக்கம் அளித்த பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ், தென் மாநிலங்களில் பல்வேறு இடங்களுக்கு யாத்திரச் சென்றவர்கள் சபரிமலை வந்ததாக கூறினார். சபரிமலையில் உள்ள சம்பிரதாயங்களை எடுத்துக்கூறியதால் 10 பெண்களும் அவர்களாகவே திரும்பிச்சென்றுவிட்டதாக, நூஹ் தெரிவித்துள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்