கேரள மாநிலம் கொல்லம் கடற்பகுதியில் ராட்சத அலையில் சிக்கி மீன்பிடிப் படகு தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள், திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கினர். அப்போது, அலையின் வேகத்தில் படகு தூக்கி வீசப்பட்டு தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 5 மீனவர்களும் கடலில் விழுந்தனர். இருப்பினும், அவர்கள் நீந்தி உயிர்தப்பினர்.ராட்சத அலையில் படகு கவிழ்ந்து, 5 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி, காண்போர் நெஞ்சை பதறவைத்துள்ளது.
#boat #beach