இந்தியா

ஆந்திராவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். செர்லே பள்ளி கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவர் வீட்டில் நேற்று திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் சுதாகர் உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுதாகர், நாட்டு வெடிகுண்டு தயார் செய்து விற்பனை செய்பவர் என விசாரணையில் தெரியவந்தது. இந்த திடீர் தீ விபத்து நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை